Sunday, April 5, 2015

அணில் குஞ்சு!!!

என் பரணில் ஓர் அணில் கூடு. அதிலிரண்டு அணில்குஞ்சு... கண் திறக்கவில்லை இன்னும்! வெளியில் எறிந்துவிடலாம் கூட்டோடு; விட்டால் உங்கள் விலை உயர்ந்த சூட்கேசுக்கு ஆபத்து அக்கா என்று வேலைக்காரியின் ஆலோசனை. எனக்கு சூட்கேஸ் முக்கியம்! அணிலுக்கு அது கட்டிய கூடு முக்கியம்! குஞ்சுக்கு வாழ்க்கை முக்கியம்! 15 வருடங்களுக்கு முன் இந்த இடத்தில் வீடுகளில்லை! மரங்கள் மட்டும்தான்!! 

வழக்கம்போல விடை தெரியா எனது வினாக்களுடன் நான்! இரண்டு உயிரை விட 10000 ரூபாய் முக்கியமா? மரம்வெட்டி வீடுகட்டி இப்போது கூடுவெட்டவும் தயங்காமல் திரிகிறோமோ? யார் வீட்டில் யார் இப்போது? யார் குடி கெடுத்தது யார்?